பச்சை நிறமாக மாறிய வைகை அணை.. இதுதான் காரணமா?
வைகை அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் பச்சை நிறமாக மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகை அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் பச்சை நிறமாக மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு, ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறிவுசார் நகரில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக, லண்டனைச் சேர்ந்த (Times Higher Education) என்ற அமைப்புடன் தொழில்துறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.