K U M U D A M   N E W S

விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் இராணுவவீரர்கள்

வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பார்த்தனர்.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இனி பட்டப்பெயருக்கு No"காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கபடி போட்டியில் கலவரம்... தமிழக வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பஞ்சாபில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தேநீர் விருந்து...விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக-விற்கு அழைப்பு

பொங்கலுக்கு ரேஸில் புதிய திரையிடப்பட்ட படங்கள்.. டிவிஆர் ரேட்டிங்கில் சாதனைப்படைத்த அமரன்..!

பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக விளையாட்டு அரசியல் செய்துள்ளது - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் விளையாட்டு அரசியல் செய்துள்ளது என்றும், கடந்த காலங்களில் டங்ஸ்டன் சுரங்கம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு மக்கள் போராட்டம் நடத்திய பிறகு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு நாடகம் ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.