K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிராமசபைக் கூட்டத்தில் மோதல்; கலவரமான கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குளாங்குறிச்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் கிராமத்தினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 1௦ மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் Passenger-ஐ பந்தாடிய TTR.. பரபரப்பு காட்சிகள்

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் – ஈரான் போர்... எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்தியர்கள் அவசியமின்றி ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சமூகநீதி நடைமுறையில் இல்லை – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார். 

ஒரே நேரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக - அமமுகவினர்.. முற்றிய வாக்குவாதம்

சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

விண்ணை பிளந்த சத்தம்.. அதிர்ந்த மெரினா.. வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.