K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

இணையத்தில் பரவும் போலி தகவல்.. சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

மகாத்மா காந்தியை புறக்கணித்தாரா திருமாவளவன்?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. மீண்டும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விசிக மது ஒழிப்பு மாநாடு... கட்டிய கொடி கம்பங்களை களவாடிய மர்ம நபர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 

திடீரென கேட்ட சத்தம்...விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்...3 பேருக்கு நேர்ந்த சோகம்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்சங் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.