"புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
The GOAT FDFS Review in Tamil : நடிகர் விஜய்யின் 'தி கோட்’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை ரோகிணி திரையரங்கத்திற்கு வந்த ஜப்பானியர்கள். ஜப்பானில் விஜய் படம் நிறைய பார்த்திருக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்
திண்டுக்கலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்கள். 20க்கும் மேற்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்களை மாநராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்ற விஜய் ரசிகர்களிடம் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது