ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. மீண்டும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தியில் 156 வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
VCK Conference: கள்ளக்குறிச்சு விசிக சார்பில் இன்று மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளசாராய விற்பனை தொடங்கியதால் களத்தில் இறங்கிய காவல்துறை.
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லண்டனில் இருந்து சென்னை வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காந்தி ஜெயந்தி விழா...முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! 5 பேருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
மணி தலைப்புச் செய்திகள்
சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல். தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவனை மர்மநபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - போலீசார் விசாரணை
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருந்த சோமஸ்கந்தர் உலோக சிலையை அதிகாரிகள் மீட்டனர்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வரும் 8ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமாற இறைவனை வேண்டுவதாக x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.