ஊதியம் நிறுத்தம்.. ஆசிரியர்கள் அதிர்ச்சி
சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டாமலேயே பல கோடி மோசடி செய்தது கண்டறியப்பட்ட நிலையில் சோதனை நடைபெறுகிறது.
அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொல்லியல் துறையினரின் நடவடிக்கையை பார்த்தால், பழங்கால சின்னங்களை அல்ல, கல்லறைகளை பாதுகாப்பதே பணியாக நினைப்பதாகத் தெரிகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.
விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆங்கில வழியிலான அறிக்கைக்கும், தமிழ் வழியிலான அறிக்கைக்கும் வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேச அணியை ஒயிட்வாஸ் செய்தது இந்தியா.
மறுஉத்தரவு வரும் வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைக்கான தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
நடிகை வனிதாவுக்கு நடன இயக்குநர் ராபர்ட் உடன் அக்டோபர் 5ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காமராஜ் என்பவர் செனனி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷாவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.