K U M U D A M   N E W S

அரசு

மமதா பானர்ஜி பாதியில் வெளியேறினாரா?.. நடந்தது என்ன? நிதி ஆயோக் தலைவர் விளக்கம்!

Niti Aayog Chairman On Mamata Banerjee : ''பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். கூடுதல் நேரம் பேச விரும்பியபோது என்னை பேச விடாமல் எனது மைக் இணைப்பை துண்டித்தனர்'' என்று மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம்.. தடையை நீக்கிய மத்திய அரசு.. வலுக்கும் எதிர்ப்பு!

Govt Employees Can Join RSS Organization : ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார்.

'நாங்கள் ரவுடிகள்தான்'.. பா.ரஞ்சித் ஆவேசம்.. திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா.. 'எங்கேயோ இடிக்குதே'.. இதுதான் காரணமா?

UPSC Chairman Manoj Soni Resign : மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்ற நிலையில், வரும் 2029ம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ளது. ஆனால் இவர் திடீரென ராஜினாமா செய்தது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... என்ன வழக்கு?... முழு விவரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

Ameer: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சமா..? அரசுக்கு பருத்தி வீரன் அமீர் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசு.. அன்புமணி குற்றச்சாட்டு!

''கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை''