K U M U D A M   N E W S

அரசு

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் - ஆளுநர் மாளிகை விளக்கம்!

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார், என்றும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்

ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

காசா போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாலத்தீவு அரசு அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது என மாலத்தீவு அரசு அறிக்கை

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அவையில் பாஜக அரசு நாடகமாடுகிறது – ஆ.ராசா குற்றச்சாட்டு

மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

2 பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள்....அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Excise duty on petrol: பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி உயர்வு.. புலம்பும் மக்கள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.