K U M U D A M   N E W S

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை முதல்வர் காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை.. ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

திமுக தான் தமிழுக்கும், தமிழர்களுக்கு எதிரான கட்சி- வானதி சீனிவாசன் காட்டம்

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.