K U M U D A M   N E W S

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

வருமான வரி பாக்கி - ஜெ.தீபா மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு சிக்கல்- விசிக எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் மனு

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கிற்கு தடையில்லை-சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது

தியாகிகளுக்கு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு 4 வாரங்கள் தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுந்தர் பிச்சை நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடி – ப்ளூம்பெர்க் தகவல்!

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சாதி காரணமாக கோயிலில் நுழைவைத் தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நதிநீர் பாதுகாப்பு நடவடிக்கை.. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அந்தரங்க வீடியோ விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்பு விசாரணை – காவல்துறையை கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தில், அப்பெண்ணின் முன்பு ஆண் காவலர்கள் விசாரணை செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது