K U M U D A M   N E W S

Annamalai : முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற சிவராமன் கொலையா?.. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்

Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivaraman Death : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. முக்கிய குற்றவாளி மரணம்..

NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.

Medical Student Death: உச்சநீதிமன்ற வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு.. நரிக்குறவர்கள் மீது காவலர்கள் சரமாரி தாக்குதல்..

சென்னையில் நரிக் குறவர் இன மக்களை போலீஸார் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் ரயில் சேவை சீரானது!

தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.