K U M U D A M   N E W S

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்

ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- அன்புமணி

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.