K U M U D A M   N E W S

சென்னை

திமுக ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது.. விஜய் விமர்சனம்

“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஜப்பானிய கடலோர காவல்படை கப்பல் சென்னை வருகை: கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் இந்தியா!

இந்திய கடலோர காவல்படைக்கும் (ICG) ஜப்பான் கடலோர காவல்படைக்கும் (JCG) இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘JCGS Itsukushima’ என்ற கப்பல் நேற்று (ஜூலை 7) சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது ‘உலக கடல் பயணம் பயிற்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்.. வாலிபர் கைது

இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தி கொடுமையால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது!

சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முடிவுற்ற திட்டப் பணிகள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.