K U M U D A M   N E W S
Promotional Banner

சென்னை

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளை.. வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் எதிரொலி: சென்னை விமானங்கள் ரத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

விமானத்தில் ஒலித்த அலாரம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவசரகால கதவை திறக்க கூடிய பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 50 இடங்களில் குடிநீர் ATM

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம்!

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு...360 பயணிகளின் திக்.. திக்.. நிமிடங்கள்

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.

துணை ஜனாதிபதி வருகை: சென்னையில் ட்ரோன் பறக்க தடை

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.

சென்னையில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல் – 2 பேர் கைது!

சென்னையில் இரவு நேரத்தில், வயதான மூதாட்டி மற்றும் அவரது பேரனை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெட்ரோ தண்டவாள டிராக் விழுந்து விபத்து.. போலீசார் வழக்கு பதிவு..!

சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடந்து வரும் போது, ராமாபுரம் பகுதியில் தூண் விழுந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நகை திருடிய போலி டாக்டர்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி - சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தை தொடர்ந்து, குஜராத் விமான நிலையம் மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2-வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற கொடூரம்.. தாய் கைது

இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை: கால்கள் உடைக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சிலிங்

மனநல மருத்துவர்கள் மாணவிக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்கி உள்ளனர்.

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி...எச்சரிக்கையை மீறிய செயலால் பரபரப்பு

சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்-இபிஎஸ்

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.