K U M U D A M   N E W S

‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!

சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு பட பாணியில் பள்ளிபாளையத்தில் அரங்கேறிய சம்பவம்…அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. ஆடியோவுடன் வெளியான சி.சி.டி.வி காட்சிகள்..!

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சி.சி.டி.வி காட்சிகள், பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து.. 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்க மனுஷங்களா இல்ல...எமனுங்களா?"- இளைஞர் லாக்கப் மரணத்தால் தாடி பாலாஜி கொத்தளிப்பு

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்

கோயிலில் குத்தாட்டம் ஆடிய அர்ச்சகர்கள்.. தமிழ்நாடு பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை மாணவர் சங்கம்!

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர், பொய்யான கருத்துக்களை பரப்பி வரக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.