K U M U D A M   N E W S

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஐபிஎல் பைனல்: கடைசி நேரத்தில் மைதானத்தை மாற்றிய பிசிசிஐ.. என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெறும் இடத்தை கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கி எழுந்த சீக்கியர்கள்.. வீடியோ டெலிட் செய்த துருவ் ராட்டி: என்ன பிரச்சினை?

துருவ் ராட்டி யூடியூப் தளத்தில் பதிவிட்ட "முகலாயர்களை அச்சுறுத்திய சீக்கிய வீரன்" (The Sikh Warrior Who Terrified the Mughals) என்ற தலைப்பிலான AI-மூலம் உருவாக்கிய வீடியோ சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அந்த வீடியோவினை டெலிட் செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் திருட்டு.. முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகள் மாயம்!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாரா? உண்மையினை உடைத்த ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், மீண்டும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.