TVK Vijay Maanadu: "மனம் தவிக்கிறது.." பறிபோன உயிர் - தவெக தலைவர் விஜய் இரங்கல்
தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்.
தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது, இதைதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய், திடீரென மேடையில் இருந்து இறங்கியதை அடுத்து, அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் திகைத்து நின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் அக்கட்சியின் செயல்திட்டங்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டன. அதில் தவெக இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விஜய் நுழைந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளந்தது.
மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரேம்பில் நடந்துசென்றபோது ரசிகர்கள் வீசிய துண்டை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் கலங்கிய கண்ணோடு கட்சியின் கொடியை ஏற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துச் சொல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய், தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வால்க் சென்று மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார் விஜய். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.