K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

சென்னையில் மலர் கண்காட்சி.. ஜனவரி 2-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 2-ஆம் தேதி  முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

2024 தமிழ்நாடு அரசியல் களம்: பிரமோஷன் டூ எக்ஸ்ப்ளோஷன் வரை!

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் சிறிதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவில் பிரமோஷன், அதிமுகவில் எமோஷன், விஜய்யின் Explosion என பரபரப்பாகவே சென்றது 2024. அப்படி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை பின்னோக்கி பார்க்கலாம்...

திமுக அனைத்து வரி உயர்வையும் திரும்ப பெற வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற திமுக-வின்  ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் பாலியல் தொல்லை.. 3 சிறுமிகளை சீரழித்த 'மிருகம்'

தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.

ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

 தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

விஜயகாந்த் நினைவு தினம்... காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை..!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு SIGTA விருது..!

தமிழில் திரையுலகை சேர்ந்த நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல் ஆகியோருக்கு கத்தாரில் SIGTA விருது வழங்கப்பட்டது.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார்.