K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழ்நாடு

ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு.., உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வழக்கு இன்று வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!" - முதல்வர்

இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”அப்படி செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை” – திருமாவளவன்

"இந்தி மொழி மீது விசிகவுக்கு வெறுப்பு இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதிய தமிழகம் நிறுவனர்

"புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று புதிய தமிழக நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவிலில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால் வழக்குப் பதிவு - சென்னை உயர்நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியர் போட்ட உத்தரவு... மதிக்காத பேருந்து ஓட்டுநர்கள்... உடனடி ஆக்ஷனால் சலசலப்பு

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத 6 பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து ஆட்சியர் அதிரடி

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன..!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.