K U M U D A M   N E W S

தமிழ்

CM Rangasamy | பாண்டிச்சேரியில் புது ரூல்ஸ் அமல்.. அறிவித்த முதல்வர் | Tamil Compulsory | Puducherry

அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு,  ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தொடை நடுங்கி திமுக.. போலீஸ் வலையில் பாஜகவினர்- அண்ணாமலை கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தொடைநடுங்கி திமுக அரசு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.