K U M U D A M   N E W S

இணையதள கோளாறு.. போர்டிங் பாஸ் தாமதம்.. விமான நிலையத்தில் பரபரப்பு

இண்டிகா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இணையதள சேவை கோளாறு காரணமாக போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

விமான பயணம்... மதுரை மக்களுக்கு குட் நியூஸ்...

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nepal Landslides : நேபாளம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு... பள்ளிகள் மூட உத்தரவு!

Nepal Landslides : கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

தீரன் பட பாணியில் கொள்ளை.. கர்நாடக போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.