K U M U D A M   N E W S

Rain Alert : தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு..... வெளிய கவனமா போங்க!

Heavy Rain in Tamil Nadu : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப். 27) செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டுக்கட்டாக பணம்.. பிடிபட்ட கண்டெய்னர்... லாரி பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் எடுத்த திடீர் முடிவு..

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனமழை எதிரொலி – விமான சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

Mohan G Arrest : மோகன் ஜியை கைது செய்தது ஏன்..? - டென்ஷன் ஆன நீதிபதி

Mohan G Arrest : அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கில் இயக்குநர் மோகன் ஜி-யை கைது செய்தது சட்டவிரோதமானது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கோயில் நிலம் ஏலம் விட அறிவிப்பு... போராட்டத்தில் குதித்த மக்கள்

Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Gold Price Today : எட்டாகனி உயரத்தில் தங்கம்...என்ன விலை தெரியுமா?

Gold Price Today in Chennai : சென்னையில் இன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Chess Olympiad 2024 : தங்கம் வென்ற தங்கப்பிள்ளைகள்.., Airport–ல் மக்கள் ஆரவாரம்

Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.