K U M U D A M   N E W S

நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு குறித்து விசாரணை.. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான கொலை மிரட்டல் வழக்கு.. நாளை எதிர்ப்பு..!

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கின்றது.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வெடிகுண்டு? தமிழக அரசுக்கு நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட விவகாரம்.

கஞ்சா வழக்கு; மன்சூர் மகனுக்கு ஜாமின்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு நிபந்தனை ஜாமின்.

ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யே விசாரிக்கும் உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்..!

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - சி.பி.ஐ வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் துரைமுருகன் வழக்கு – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்து மனு.

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – மனுக்களை விசாரிக்க மறுப்பு 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.

பண மோசடி வழக்கு..  ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யானைகளை புதிய மறுவாழ்வு மையத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு  விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று - தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

கட்டிட அனுமதிக்கு  தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசானைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”யார் கிட்ட வேணாலும் போய் சொல்லுங்க”- செய்தியாளர்களை மிரட்டிய காவல் அதிகாரி

அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு குற்றவாளி சதீஷை அழைத்துவந்தபோது புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் முயற்சி