K U M U D A M   N E W S

நீதிமன்றம்

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

4 மாதத்தில் காலி ஆகிறது எம்.எம்.காலனி.. என்ன காரணம் ?

மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதிகளில் ஊதியத்தை சுருட்டிய அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்..  அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.