K U M U D A M   N E W S

நீதிமன்றம்

AIADMK Symbol Case : அதிமுக உட்கட்சி விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைக்காவிட்டால் மனு அளிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விவசாயிகள் மேல்முறையீட்டு மனு.. வெளியேற்ற தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடலூர் மாவட்டம், மலையடி குப்பம் விவசாயிகளின் மேல்முறையீட்டு மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்களை வெளியேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், கைதிகளுக்கு சாதாரண அல்லது அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

அமைச்சரவை முடிவுபடி தான் ஆளுநர் செயல்பட முடியும் என்றுதான் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - அரசு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் நியமனம்.. கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைது செய்யப்பட்ட நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறை துறைக்கு உத்தரவு...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பறிமுதல் செய்த 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் - சுங்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாதவிடாய்னு கூட பார்க்காம.. மாமியார் செய்த கொடுமை.. விவாகரத்தில் முடிந்த மூடநம்பிக்கை!

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரன் வழக்கு; சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான 20 வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் RN ரவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

"மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது " முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா?"

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிறை தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் -தமிழ்நாடு அரசு இடையிலான மோதல்.. உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

4 மாதத்தில் காலி ஆகிறது எம்.எம்.காலனி.. என்ன காரணம் ?

மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.