K U M U D A M   N E W S

"அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்துங்க" - பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு

தனது அனுமதியின்றி கட்சியின் கொடி, சின்னம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு போன்றவற்றை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபியிடம் மனு ராமதாஸ் தரப்பில் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-வது தலைமை நீதிபதியாக மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- அன்புமணி

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? அன்புமணி கேள்வி

பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கோஷ்டி மோதல்-ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரல்

ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி கேள்வி

உழவர்களின் நலன்கள் தொடர்பாக வாக்குறுதிகளில் 5% கூட நிறைவேற்றாத திமுக அரசு, உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது காட்டும் அக்கறை இவ்வளவு தானா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.