K U M U D A M   N E W S

கேரளாவில் 51 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்: அரசின் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்: அச்சத்தில் மக்கள்!

தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தானாக திறந்து மூடும் பழுதான லிஃப்ட்...கர்ப்பிணிகள் கடும் அவதி

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்

ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் பெண்.. சாதுர்யமாக செயல்பட்ட மருத்துவர்!

ஜான்சி ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ஹேர் க்ளிப் மற்றும் பாக்கெட் கத்தியை வைத்து பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.