K U M U D A M   N E W S
Kumudam Ad

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்டெர்லாக் செய்யப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து - ரயில்வே நிர்வாகம்

பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இயக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல் ‘ப்ரீடம்’ படம் இருக்காது.. நடிகர் சசிகுமார்

‘ப்ரீடம்’ திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் போல் காமெடியாக இருக்காது என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.