K U M U D A M   N E W S

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

நடிகை அருணா வீட்டில் ரெய்டு.. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சோதனை!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' மற்றும் 'இதயத்தை திருடாதே' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை அருணா தொடர்பான அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் கணவரும், தொழிலதிபருமான மோகன் குப்தாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்