#BREAKING || ஊதியம் வழங்காததால் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை. 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரயிலில் இடம் இல்லாததால் ரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.