ஈரோட்டில் நேர்ந்த கொடூரம் | Erode | Arrest | Kumudam News
ஈரோட்டில் நேர்ந்த கொடூரம் | Erode | Arrest | Kumudam News
ஈரோட்டில் நேர்ந்த கொடூரம் | Erode | Arrest | Kumudam News
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.