ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி
தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.
2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.
சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.
அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.