கடும் வெள்ளைப்பெருக்கு; பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்காலிலிருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது