K U M U D A M   N E W S

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை

நயினார் நாகேந்திரன் பல மொழி புலவராகி, பழமொழி பேசிக்கொண்டிருக்கிறார்.இதை பார்க்கும் போது மாநிலத்தலைவராக இருந்து தேசிய தலைவராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தினை சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கால் ஓடையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.