TN District News Today: மாவட்ட செய்திகள் | 12 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 12 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 12 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது மத்திய அமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க தங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.