K U M U D A M   N E W S
Kumudam Ad

தங்கத்தின் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கு விற்பனை!

சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது.. ரூ.6 லட்சம் பறிமுதல்!

கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமல்: நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி- பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவது நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராசிபுரத்தில் கொடூரம்! 7 மாத ஆண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம்; நரபலியா? கருக்கலைப்பா? மர்மம் விலகுமா?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.