K U M U D A M   N E W S

RR

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.. வாக்குவாதத்தில் வியாபாரிகள் ஈடுபட்டதால் பரபரப்பு

புதுச்சேரி நேருவீதியில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். அப்போது அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பச்சிளம் குழந்தையை விற்ற தாய் - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திடீர் போராட்டத்தில் குதித்த செவிலியர்கள்... காரணம் என்ன?

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் செவிலியர்களை பணியமர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாம்சங் ஊழியர்கள் விவகாரம்: தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை... தொழிலாளர்கள் உறுதி!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் குண்டுவெடிப்பு... NIA அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை NIA அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்