K U M U D A M   N E W S

பேரினவாதத்திற்கு உதாரணமாக உள்ளது.. திமுகவை கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து '₹' சின்னம் நீக்கப்பட்ட நிலையில் இந்த செயல், மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் அழுத்தத்தின் காரணமாக ஞானசேகரனை சிறையில் அடைத்துள்ளனர்.. நீதிமன்றத்தில் மனு

காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

குற்றவாளி ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ள சிறப்பு புலனாய்வு குழு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது.

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. குற்றவாளி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தடவியல் துறை அதிகாரிகள் தலைமையில் குரல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Budget 2025: கிராம பொருளாதாரத்தில் புதிய புரட்சி... பட்ஜெட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Budget 2025: பீகாருக்கு பிரியாணி விருந்து... தமிழ்நாட்டுக்கு வெறும் பாயாசம்... பட்ஜெட் தகராறு!

தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.