முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளுள் இரண்டாம் படைவீடாகத் திகழ்வது, திருச்செந்தூர். முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிகழ்ந்த தலம்.
பகைவர்க்கும் அருள்பவனா பாலசுப்ரமண்யனாக முருகப் பெருமான் உறையும் இத்தலத்தில் பலருக்கும் தெரியாத அற்புதங்கள் பல உண்டு. பொதுவாக கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு உற்சவர் மூர்த்தங்கள் இருக்கும். ஆனால் இங்கே மூலவருக்கு இணையாக நான்கு உற்சவத் திருமேனிகள் உள்ளன. அதோடு, தினமும் ஒன்பது கால பூஜைகள் நடக்கும் ஒரேதலம் இது.
கிழக்கில் கடற்கரை இருப்பதால் பாதுகாப்பு கருதி மேற்கில் இராஜகோபுரம் கட்டப்பட்டதாம். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த மேற்கு இராஜ கோபுர வாசல் திறக்கப்படுகிறது. காரணம், இந்த நுழைவாயில் வழியாக வரும் பக்தர்கள் 27 படிகள் கீழே இறங்கி சிரமப்பட்டு வர வேண்டும் என்பதுதான்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் நீராடவேண்டியது நாழிக்கிணறிலா, அல்லது கடலிலா என்பது பலருக்கும் வரும் சந்தேகம். திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு பிறகே நாழிக்கிணறில் நீராட வேண்டும்.பரிகாரத்திற்காகவோ அல்லது நேர்த்திக்கடன் செலுத்தவோ வரும் பக்தர்கள், கடைவீதியில் அமைந்துள்ள தூண்டுகை விநாயகர் கோயிலில் சிதறுகாய் எறிந்து வழிபட வேண்டும். பிறகு முருகனை தரிசிக்க ஆலயம் செல்ல வேண்டும்.
நாழிக்கிணறு: திருச்செந்தூரில், காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளைக் குறிக்கும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்தனவாம். இவற்றில் கந்தபுஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே தற்போது நாழிக்கிணறு என வழங்கப்படுகிறது. இது 24 அடி ஆழம் உடையது.
முதல் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சித்தி விநாயகர் உள்ளார். கரிய மாணிக்கப் பிள்ளையார், மகா மண்டபத்தில் பார்வதியம்மனுக்கும் வீரபாகுதேவருக்கும் இடையே காட்சி தருகிறார். 'கம்பத்தடி விநாயகர்' என்றழைக்கப்படும் பிள்ளையார், கொடிமரத்தருகே காட்சி தருகிறார்.
முருகன் பால சுப்பிரமணியராக தவக் கோலத்தில் சடைமுடி தரித்து கடற்கரை யாண்டியாகக் காட்சி தருகிறார். சிவபூஜை செய்யும் வடிவம் என்பதால், இவரது திருக்கரத்தில் தாமரை மலர் உள்ளது. வலத்திருவடியின் அருகில் வெள்ளிச்சீபலியும் இடத்திருவடியின் அருகில் தங்கச்சீபலியும் காட்சி தருகின்றன. சிங்கமுகனை வென்ற குலிசப்படைகொண்டு விளங்குகிறார். வேலும் சிலநேரங்களில் சாத்தப்படுகிறது.
மூலவருக்கு தினமும் உதயமார்த்தாண்டம், உச்சிக்காலம், அர்த்த சாமம் ஆகிய காலங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவர் சண்முகருக்கு ஆண்டிற்கு 36 அபிஷேகங்கள் நடக்கின்றன.
இரண்டுவகைநிவேதனங்கள்: மூலவர்தவக் கோலத்திலிருப்பதால் இவருக்கு உரிய நிவேதனத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. உற்சவர் சண்முகர் இல்லறக் கோலத்திலிருப்பதால் அவரது நிவேதனத்தில் காரம் புளி சேர்க்கப்படுகின்றது.
வீரபாகு: மூலவருக்கு முன்புறமுள்ள மணியடியின் வாயிலில் வலப்புறம் வீரபாகு தேவர் திருவுருவம் உள்ளது. இவருக்குப் பூக்களாலாகிய அங்கிசாத்தி, பிட்டமுது படைத்து வழிபடுவோர், எண்ணியதைத் திண்ணமாய் அடைவர் என்பது இவ் வட்டாரத்து மக்கள் நம்பிக்கை
வீரமகேந்திரர்: திருவுருவம் மணியடி வாயிலின் இடப்புறம் அமைக்கப்பட்டுள்ளது. நவவீரர்களில் புட்பராகவல்லியிடம் பிறந்தவர் இவர். இவரை வணங்கினால் புத்திபலம் சிறக்குமாம்.
நந்தீசுவரர்: மூலவர் சன்னதியில் இடது பின் சுவரில் முருகப் பெருமான் பூஜிக்கும் சிவபெருமான் லிங்க வடிவில் இருப்பதால், அவருக்குரிய நந்தி, மூலவர் திருமுன் மயில் சிலைகளையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இரட்டைமயில்: மூலவர் முன் இரு மயில்கள் உள்ளன. சூரனுடன் போரிட்டபோது, தேவேந்திரன் மயிலாகி முருகனைச் சுமந்தான். அதன் பின்னரே சூரன் மயிலாகிச் சுமந்தான் எனக் கந்தபுராணம் கூறுகிறது. எனவே இரு மயில்வாகனங்கள் உள்ளன.
ஒன்பதுகாலபூஜைகள்: வேறெங்கும் இல்லா விசேஷமாக இத்தலத்தில் தினமும் 9 கால பூஜைகள் நடக்கின்றன. 1 விசுவரூடம் (காலை 5:30), 2.உதய மார்த்தாண்டம் காலை 6 மணிக்கு அபிஷேகம், 3.இரண்டாம்கால சந்தி, 4.மூன்றாம் காலசந்தி, 5.உச்சிக்காலம்(அபிஷேகம்), 6.சாயரட்சை, 7.இராக்காலம், 8.ஏகாந்தம், 9. இரகசியம்
இவற்றுள் முதல் இரண்டு கால தரிசனம் மிகவும் பிரசித்தியானது. மேலும், இரவு 9.45 மணியளவில் சுவாமிக்குத் திரையிட்டுக் காட்டப்படும் தீபாராதனையை 'இரகசிய தீபாராதனை' என அழைக்கின்றனர். பள்ளியறைச் சொக்கரை வைத்து இத்தீபாராதனை நடைபெறுகிறது.
பள்ளியறை நிவேதனங்களாக பால், பல்லக்கு உருண்டை (சுகியன்), அரவணை, பால்கோவா முதலியன படைக்கப்படுகின்றன. வீரவாகு மூர்த்திக்குப் பிட்டமுதும், மயிலுக்குப் பொரியும், இரவில் பைரவருக்கு வடைகளும் படைக்கப்படுகின்றன. சண்முகர் அர்ச்சனை முடிவில் சண்முகருக்குப் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், பாசிப் பருப்புப் பொங்கல், புளியோதரை, மிளகுசம்பா, தயிர்சாதம் ஆகியவை படைக்கப் படுகின்றன.
உற்சவர்சண்முகம்: ஆறுமுகப் பெருமானான இவர், திருக்கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ளார். பிரதான உற்சவரான இவர் ஆவணி மற்றும் மாசி உற்சவங்களில் சிவப்பு சாத்தியும் (சிவனாக), வெள்ளை சாத்தியும் (பிரம்மாவாக), பச்சை சாத்தி (திருமாலாக)யும் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஜெயந்திநாதர்: தங்க ரதத்தில் தினமும் மாலை பவனி வரும் உற்சவமூர்த்தி இவர். கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவின் உற்சவமூர்த்தியும் இவரே.
சாயாபிஷேகம்: சூரசம்ஹாரத்திற்குப் பிறகு மகாதேவர் சன்னதிக்கு வரும் ஜெயந்திநாதருக்கு முன் ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள் இதனை சாயாபிஷேகம் என்பார்கள். 'சாயா' என்பதற்கு 'நிழல்' என்று பொருள். போரிலிருந்து திரும்பிய முருகனை குளிர்விக்க செய்யும் பூஜையை முருகனே கண்டு மனமகிழ்ந்து குளிர்வதாக ஐதிகம்.
குமாரவிடங்கப்பெருமான்: உற்சவரான சண்முகரின் பிரதி பிம்பம் இவர். இவரை பக்தர்கள் மாப்பிள்ளை சுவாமி என்கிறார்கள். ஐட்டசி திருக்கல்யாணம், பங்குனி உத்திரம் மற்றும் ஆவணி, மாசி மாத உற்சவ மூர்த்தியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்.
அலைவாய்உகந்தபெருமான்: அலைவாய் உகந்த பெருமான், ஆவணி, மாசி, தைப்பூசம் மற்றும் சண்முகர் ஆண்டு விழா போன்ற திருவிழாக்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தைப்பூச திருவிழாவின் நாயகன் இவரே.
சூரசம்ஹாரமூர்த்தி: இத்தலத்தில் உள்ள சூர சம்ஹார மூர்த்தி சிலை, சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சியினை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. குமுத மலர் ஏந்திய நிலையில் அருளும் தெய்வானை அம்மன் சன்னதி. முதல் பிரகாரத்தில் வட மேற்கில் அமைந்துள்ளது. வள்ளி அம்மன் சன்னதி முதல் பிரகாரத்தில் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் பள்ளியறை பூஜை வள்ளி சன்னதியில் தினமும் இரவு நடைபெறும்.
வெங்கடாசலபதி: பொதுவாக முருகன் கோவிலில் பெருமாளுக்கு சன்னதி அமைந்து இருப்பது அபூர்வமாகக் கருதப்படுகிறது. வெங்கடாசலபதி சன்னதியில், பள்ளி கொண்ட பெருமான், கஜ வட்சுமி, சந்தான கிருஷ்ணன் சிலைகளும் உள்ளன.
108 மஹாதேவர் சன்னதி:ஒரே கல்லில் 108 சிவ லிங்கங்கள் வடிக்கப்பட்ட திருவுருவாக திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளார்.
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி:முதல் பிரகாரத்தில் அமைந்து அருள்பாலிக்கிறார். குரு பரிகாரங்கள் செய்யவும் ஏற்ற தலம் இது.
பஞ்ச லிங்க சன்னதி:மூலவருக்கு பின்புறம் சிறிய வாயில் வழியே சென்றால், ஐந்து லிங்கங்கள் ஒரே பிடத்தில் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை முருகப்பெருமானே பூஜிப்பதாக ஐதிகம். மூலவருக்கு இடப்புறம் உள்ள செகந்நாதர், உட்குழிந்த யோனி லிங்கமாகும். இவரை 'சூரிய லிங்கம்' என்பர். அடுத்து செந்தில்நாயகர் அறையிலுள்ள மாடக் குழியில் உள்ள லிங்கம் 'சோம நாதராகும்! இவரை ’சந்திர லிங்கம்' என்பர். ஆறுமுகப் பெருமானுக்கு வலப்புறம் உள்ள மாடக் குழியில் அமைந்துள்ள லிங்கம் 'ஆன்ம லிங்க’மாகும்.
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இயன்றால் நேரில் சென்று தரிசியுங்கள். அல்லது மண்டல பூஜைகள் நடக்கும் 48 நாட்களுக்குள் சென்று வணங்குங்கள். செந்திலாண்டவர் அருளால் உங்கள் வாழ்வு செழிக்கும்.
(கட்டுரையாளர்:குமிலக்குடி கமலா ராஜகோபால்/பக்தி/03.07.2025)
பகைவர்க்கும் அருள்பவனா பாலசுப்ரமண்யனாக முருகப் பெருமான் உறையும் இத்தலத்தில் பலருக்கும் தெரியாத அற்புதங்கள் பல உண்டு. பொதுவாக கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு உற்சவர் மூர்த்தங்கள் இருக்கும். ஆனால் இங்கே மூலவருக்கு இணையாக நான்கு உற்சவத் திருமேனிகள் உள்ளன. அதோடு, தினமும் ஒன்பது கால பூஜைகள் நடக்கும் ஒரேதலம் இது.
கிழக்கில் கடற்கரை இருப்பதால் பாதுகாப்பு கருதி மேற்கில் இராஜகோபுரம் கட்டப்பட்டதாம். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த மேற்கு இராஜ கோபுர வாசல் திறக்கப்படுகிறது. காரணம், இந்த நுழைவாயில் வழியாக வரும் பக்தர்கள் 27 படிகள் கீழே இறங்கி சிரமப்பட்டு வர வேண்டும் என்பதுதான்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் நீராடவேண்டியது நாழிக்கிணறிலா, அல்லது கடலிலா என்பது பலருக்கும் வரும் சந்தேகம். திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு பிறகே நாழிக்கிணறில் நீராட வேண்டும்.பரிகாரத்திற்காகவோ அல்லது நேர்த்திக்கடன் செலுத்தவோ வரும் பக்தர்கள், கடைவீதியில் அமைந்துள்ள தூண்டுகை விநாயகர் கோயிலில் சிதறுகாய் எறிந்து வழிபட வேண்டும். பிறகு முருகனை தரிசிக்க ஆலயம் செல்ல வேண்டும்.
நாழிக்கிணறு: திருச்செந்தூரில், காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளைக் குறிக்கும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்தனவாம். இவற்றில் கந்தபுஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே தற்போது நாழிக்கிணறு என வழங்கப்படுகிறது. இது 24 அடி ஆழம் உடையது.
முதல் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சித்தி விநாயகர் உள்ளார். கரிய மாணிக்கப் பிள்ளையார், மகா மண்டபத்தில் பார்வதியம்மனுக்கும் வீரபாகுதேவருக்கும் இடையே காட்சி தருகிறார். 'கம்பத்தடி விநாயகர்' என்றழைக்கப்படும் பிள்ளையார், கொடிமரத்தருகே காட்சி தருகிறார்.
முருகன் பால சுப்பிரமணியராக தவக் கோலத்தில் சடைமுடி தரித்து கடற்கரை யாண்டியாகக் காட்சி தருகிறார். சிவபூஜை செய்யும் வடிவம் என்பதால், இவரது திருக்கரத்தில் தாமரை மலர் உள்ளது. வலத்திருவடியின் அருகில் வெள்ளிச்சீபலியும் இடத்திருவடியின் அருகில் தங்கச்சீபலியும் காட்சி தருகின்றன. சிங்கமுகனை வென்ற குலிசப்படைகொண்டு விளங்குகிறார். வேலும் சிலநேரங்களில் சாத்தப்படுகிறது.
மூலவருக்கு தினமும் உதயமார்த்தாண்டம், உச்சிக்காலம், அர்த்த சாமம் ஆகிய காலங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவர் சண்முகருக்கு ஆண்டிற்கு 36 அபிஷேகங்கள் நடக்கின்றன.
இரண்டுவகைநிவேதனங்கள்: மூலவர்தவக் கோலத்திலிருப்பதால் இவருக்கு உரிய நிவேதனத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. உற்சவர் சண்முகர் இல்லறக் கோலத்திலிருப்பதால் அவரது நிவேதனத்தில் காரம் புளி சேர்க்கப்படுகின்றது.
வீரபாகு: மூலவருக்கு முன்புறமுள்ள மணியடியின் வாயிலில் வலப்புறம் வீரபாகு தேவர் திருவுருவம் உள்ளது. இவருக்குப் பூக்களாலாகிய அங்கிசாத்தி, பிட்டமுது படைத்து வழிபடுவோர், எண்ணியதைத் திண்ணமாய் அடைவர் என்பது இவ் வட்டாரத்து மக்கள் நம்பிக்கை
வீரமகேந்திரர்: திருவுருவம் மணியடி வாயிலின் இடப்புறம் அமைக்கப்பட்டுள்ளது. நவவீரர்களில் புட்பராகவல்லியிடம் பிறந்தவர் இவர். இவரை வணங்கினால் புத்திபலம் சிறக்குமாம்.
நந்தீசுவரர்: மூலவர் சன்னதியில் இடது பின் சுவரில் முருகப் பெருமான் பூஜிக்கும் சிவபெருமான் லிங்க வடிவில் இருப்பதால், அவருக்குரிய நந்தி, மூலவர் திருமுன் மயில் சிலைகளையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இரட்டைமயில்: மூலவர் முன் இரு மயில்கள் உள்ளன. சூரனுடன் போரிட்டபோது, தேவேந்திரன் மயிலாகி முருகனைச் சுமந்தான். அதன் பின்னரே சூரன் மயிலாகிச் சுமந்தான் எனக் கந்தபுராணம் கூறுகிறது. எனவே இரு மயில்வாகனங்கள் உள்ளன.
ஒன்பதுகாலபூஜைகள்: வேறெங்கும் இல்லா விசேஷமாக இத்தலத்தில் தினமும் 9 கால பூஜைகள் நடக்கின்றன. 1 விசுவரூடம் (காலை 5:30), 2.உதய மார்த்தாண்டம் காலை 6 மணிக்கு அபிஷேகம், 3.இரண்டாம்கால சந்தி, 4.மூன்றாம் காலசந்தி, 5.உச்சிக்காலம்(அபிஷேகம்), 6.சாயரட்சை, 7.இராக்காலம், 8.ஏகாந்தம், 9. இரகசியம்
இவற்றுள் முதல் இரண்டு கால தரிசனம் மிகவும் பிரசித்தியானது. மேலும், இரவு 9.45 மணியளவில் சுவாமிக்குத் திரையிட்டுக் காட்டப்படும் தீபாராதனையை 'இரகசிய தீபாராதனை' என அழைக்கின்றனர். பள்ளியறைச் சொக்கரை வைத்து இத்தீபாராதனை நடைபெறுகிறது.
பள்ளியறை நிவேதனங்களாக பால், பல்லக்கு உருண்டை (சுகியன்), அரவணை, பால்கோவா முதலியன படைக்கப்படுகின்றன. வீரவாகு மூர்த்திக்குப் பிட்டமுதும், மயிலுக்குப் பொரியும், இரவில் பைரவருக்கு வடைகளும் படைக்கப்படுகின்றன. சண்முகர் அர்ச்சனை முடிவில் சண்முகருக்குப் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், பாசிப் பருப்புப் பொங்கல், புளியோதரை, மிளகுசம்பா, தயிர்சாதம் ஆகியவை படைக்கப் படுகின்றன.
உற்சவர்சண்முகம்: ஆறுமுகப் பெருமானான இவர், திருக்கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ளார். பிரதான உற்சவரான இவர் ஆவணி மற்றும் மாசி உற்சவங்களில் சிவப்பு சாத்தியும் (சிவனாக), வெள்ளை சாத்தியும் (பிரம்மாவாக), பச்சை சாத்தி (திருமாலாக)யும் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஜெயந்திநாதர்: தங்க ரதத்தில் தினமும் மாலை பவனி வரும் உற்சவமூர்த்தி இவர். கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவின் உற்சவமூர்த்தியும் இவரே.
சாயாபிஷேகம்: சூரசம்ஹாரத்திற்குப் பிறகு மகாதேவர் சன்னதிக்கு வரும் ஜெயந்திநாதருக்கு முன் ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள் இதனை சாயாபிஷேகம் என்பார்கள். 'சாயா' என்பதற்கு 'நிழல்' என்று பொருள். போரிலிருந்து திரும்பிய முருகனை குளிர்விக்க செய்யும் பூஜையை முருகனே கண்டு மனமகிழ்ந்து குளிர்வதாக ஐதிகம்.
குமாரவிடங்கப்பெருமான்: உற்சவரான சண்முகரின் பிரதி பிம்பம் இவர். இவரை பக்தர்கள் மாப்பிள்ளை சுவாமி என்கிறார்கள். ஐட்டசி திருக்கல்யாணம், பங்குனி உத்திரம் மற்றும் ஆவணி, மாசி மாத உற்சவ மூர்த்தியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்.
அலைவாய்உகந்தபெருமான்: அலைவாய் உகந்த பெருமான், ஆவணி, மாசி, தைப்பூசம் மற்றும் சண்முகர் ஆண்டு விழா போன்ற திருவிழாக்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தைப்பூச திருவிழாவின் நாயகன் இவரே.
சூரசம்ஹாரமூர்த்தி: இத்தலத்தில் உள்ள சூர சம்ஹார மூர்த்தி சிலை, சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சியினை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. குமுத மலர் ஏந்திய நிலையில் அருளும் தெய்வானை அம்மன் சன்னதி. முதல் பிரகாரத்தில் வட மேற்கில் அமைந்துள்ளது. வள்ளி அம்மன் சன்னதி முதல் பிரகாரத்தில் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் பள்ளியறை பூஜை வள்ளி சன்னதியில் தினமும் இரவு நடைபெறும்.
வெங்கடாசலபதி: பொதுவாக முருகன் கோவிலில் பெருமாளுக்கு சன்னதி அமைந்து இருப்பது அபூர்வமாகக் கருதப்படுகிறது. வெங்கடாசலபதி சன்னதியில், பள்ளி கொண்ட பெருமான், கஜ வட்சுமி, சந்தான கிருஷ்ணன் சிலைகளும் உள்ளன.
108 மஹாதேவர் சன்னதி:ஒரே கல்லில் 108 சிவ லிங்கங்கள் வடிக்கப்பட்ட திருவுருவாக திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளார்.
மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி:முதல் பிரகாரத்தில் அமைந்து அருள்பாலிக்கிறார். குரு பரிகாரங்கள் செய்யவும் ஏற்ற தலம் இது.
பஞ்ச லிங்க சன்னதி:மூலவருக்கு பின்புறம் சிறிய வாயில் வழியே சென்றால், ஐந்து லிங்கங்கள் ஒரே பிடத்தில் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை முருகப்பெருமானே பூஜிப்பதாக ஐதிகம். மூலவருக்கு இடப்புறம் உள்ள செகந்நாதர், உட்குழிந்த யோனி லிங்கமாகும். இவரை 'சூரிய லிங்கம்' என்பர். அடுத்து செந்தில்நாயகர் அறையிலுள்ள மாடக் குழியில் உள்ள லிங்கம் 'சோம நாதராகும்! இவரை ’சந்திர லிங்கம்' என்பர். ஆறுமுகப் பெருமானுக்கு வலப்புறம் உள்ள மாடக் குழியில் அமைந்துள்ள லிங்கம் 'ஆன்ம லிங்க’மாகும்.
வரும் 7.7.2025 அன்று திருச்செந்தூர் தலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இயன்றால் நேரில் சென்று தரிசியுங்கள். அல்லது மண்டல பூஜைகள் நடக்கும் 48 நாட்களுக்குள் சென்று வணங்குங்கள். செந்திலாண்டவர் அருளால் உங்கள் வாழ்வு செழிக்கும்.
(கட்டுரையாளர்:குமிலக்குடி கமலா ராஜகோபால்/பக்தி/03.07.2025)