லைகா நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
வழக்கின் பின்னணியும் உயர் நீதிமன்ற உத்தரவும்
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காகச் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. இந்தக் கடன் தொகை முழுவதையும் விஷால் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறிப் படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் மும்மினேனி சுதிர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்துள்ளதாகவும், சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இந்த மேல்முறையீட்டு வழக்கைத் தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி, விசாரணையில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து, இந்த வழக்கை மாற்று அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று அவர் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணியும் உயர் நீதிமன்ற உத்தரவும்
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காகச் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. இந்தக் கடன் தொகை முழுவதையும் விஷால் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறிப் படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் மும்மினேனி சுதிர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்துள்ளதாகவும், சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இந்த மேல்முறையீட்டு வழக்கைத் தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி, விசாரணையில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து, இந்த வழக்கை மாற்று அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று அவர் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









