சினிமா

சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே பயன்படுத்தப்படுவதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி
சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி தான் நடித்த மார்கன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்சிக்காக மதுரைக்கு வருகை தந்தார். நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் கதாநாயகனாக நடிக்கும் 12-வது படமான ‘மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார்.

அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மதுரை பி.பி. குளம் அருகே உள்ள தனியார் திரையரங்கில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஜய் ஆண்டனி பங்கேற்றார். நிகழ்ச்சியை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அவரது கைதைப்பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை. அரசியல் வருகை குறித்து கேட்டபோது நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றார்.

மதுரையை பொறுத்து நல்ல கதைக்களம் அமைந்தால் நிச்சயம் படம் நடிப்பேன் என்றார். மதுரை மக்களின் இயல்பு அன்பு மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ (AI) வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது. போர் மிகவும் தவறானது., மிகவும் வருத்தமாக உள்ளது. காசாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது என்றார்.

நான் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. வட்டம் மாவட்டம் என அரசியல் பத்தி எதுவும் தெரியாது, இன்னும் மக்களை பார்த்து சந்தித்து புரிந்து கொள்ள வேண்டும். நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆட்சி செய்யலாம் என்றார்.

உங்களுடைய படங்களுக்கு டைட்டில் வித்தியாசமாக வைப்பது ஏன் என்ற கேள்விக்கு? பணக்காரன எல்லாரும் வச்சிக்கிறாங்க. பிச்சைக்காரனா யாரும் கண்டுக்கறது என்பதனால் நான் செண்டிமெண்ட் பார்ப்பது கிடையாது. அதனால எனது படத்துக்கு இது போன்ற டைட்டில்களை வைக்கிறேன். பிச்சைக்காரன் மற்றும் கொலைகாரன் படத்திற்கு பொருத்தமான பெயர் தான் வைத்துள்ளேன் என்றார்