நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. இந்த படம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சுந்தரா டிராவல்ஸ்' ஒரு பார்வை
கடந்த 2002-ல் வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தை தாஹா இயக்கி இருந்தார். இந்தப் படம், மலையாளத்தில் அவர் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக் ஆகும். முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த படம் முரளி மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
'சுந்தரா டிராவல்ஸ்' மறுவெளியீடு
'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் ஏற்கனவே கடந்த மே மாதம் ரீ-ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்போது வெளியாகவில்லை. தற்போது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மறுவெளியீட்டு உரிமையை சிவபெருமான் என்பவர் கைப்பற்றியுள்ளார்.
சமீபத்தில் வெளியான பல பழைய படங்கள் மறுவெளியீட்டில் அதிக வெற்றியைப் பெற்று வருவதால், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு மறக்க முடியாத நகைச்சுவை விருந்தாக இந்தப் படம் மீண்டும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'சுந்தரா டிராவல்ஸ்' ஒரு பார்வை
கடந்த 2002-ல் வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தை தாஹா இயக்கி இருந்தார். இந்தப் படம், மலையாளத்தில் அவர் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக் ஆகும். முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த படம் முரளி மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
'சுந்தரா டிராவல்ஸ்' மறுவெளியீடு
'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் ஏற்கனவே கடந்த மே மாதம் ரீ-ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்போது வெளியாகவில்லை. தற்போது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மறுவெளியீட்டு உரிமையை சிவபெருமான் என்பவர் கைப்பற்றியுள்ளார்.
சமீபத்தில் வெளியான பல பழைய படங்கள் மறுவெளியீட்டில் அதிக வெற்றியைப் பெற்று வருவதால், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு மறக்க முடியாத நகைச்சுவை விருந்தாக இந்தப் படம் மீண்டும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.