குஜராத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளான விசாவதர் மற்றும் காடி, பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மேற்கு தொகுதி, கேரளா மாநிலத்தில் நிலம்பூர் தொகுதி மற்றும் மேற்குவங்காளத்தில் காளிகஞ்ச் தொகுதி என மொத்தம் 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவுப்பெற்றுள்ளது. 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் முறையே தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி- 2 இடங்களில் வெற்றி:
குஜராத்தின் காடி தொகுதியில் பாஜகவும், குஜராத்தின் விசாவதர் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா மேற்கில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்காளத்திலுள்ள காளிகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
நடைப்பெற்று முடிந்துள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவானது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதற்கு காரணம், இந்த 5 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதில் காடி தொகுதியில் மட்டுமே பாஜக வேட்பாளரான ராஜேந்திரகுமார் 39452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வியினை சந்தித்துள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம், குஜராத்தில் 2022 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விசாவதர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பூபேந்திர பயானி வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் 2023 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் பூபேந்திர பயானி. இதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி விசாவதர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது.
பாஜக சார்பில் கீரிட் பட்டேல் களமிறக்கப்பட்ட நிலையில், 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலிய கோபல் விசாவதர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து மீண்டும், குஜராத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5- ஆக மாறியுள்ளது. 1995 ஆம் ஆண்டு முதலே குஜராத் மாநிலம் பாஜகவினர் வசம் தான் உள்ளது. அப்படியிருக்கையில், ஆம் ஆத்மியின் வருகை குஜராத்தில் மும்முனை போட்டியை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் வாகை சூடிய காங்கிரஸ்:
இடைத்தேர்தல் முடிவுகளில் கேரள மாநிலமும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், நிலாம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக பதவியில் இருந்தவர் பி.வி.அன்வர். சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கிய பி.வி.அன்வர், கேரள மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணியின் ஆதரவுடன் அத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் பி.வி.அன்வருக்கு ஆளும் இடதுசாரி கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனது பதவியினை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் பி.வி.அன்வர் கேரள மாநில திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனால் தான் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், பாஜக வேட்பாளர், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பி.வி.அன்வரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
நிலாம்பூர் சட்டமன்ற தொகுதியானது, பிரியங்கா காந்தி வெற்றி பெற்ற வயநாடு மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரியங்கா காந்தியும் சாலை வழி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்ஆர்யதன் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் மேற்குவங்காளம்:
பஞ்சாப் மாநிலம் லூதினா மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் ஆரோரா 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் காளிகஞ்ச் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அலிஃபா அஹமத் 50,049 வாக்குகள் வித்தியத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். நடைப்பெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவானது பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவுப்பெற்றுள்ளது. 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் முறையே தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆம் ஆத்மி- 2 இடங்களில் வெற்றி:
குஜராத்தின் காடி தொகுதியில் பாஜகவும், குஜராத்தின் விசாவதர் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா மேற்கில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்காளத்திலுள்ள காளிகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
நடைப்பெற்று முடிந்துள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவானது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதற்கு காரணம், இந்த 5 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதில் காடி தொகுதியில் மட்டுமே பாஜக வேட்பாளரான ராஜேந்திரகுமார் 39452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வியினை சந்தித்துள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம், குஜராத்தில் 2022 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விசாவதர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பூபேந்திர பயானி வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் 2023 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் பூபேந்திர பயானி. இதனையடுத்து ஜூன் 19 ஆம் தேதி விசாவதர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது.
பாஜக சார்பில் கீரிட் பட்டேல் களமிறக்கப்பட்ட நிலையில், 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் இத்தாலிய கோபல் விசாவதர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து மீண்டும், குஜராத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5- ஆக மாறியுள்ளது. 1995 ஆம் ஆண்டு முதலே குஜராத் மாநிலம் பாஜகவினர் வசம் தான் உள்ளது. அப்படியிருக்கையில், ஆம் ஆத்மியின் வருகை குஜராத்தில் மும்முனை போட்டியை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் வாகை சூடிய காங்கிரஸ்:
இடைத்தேர்தல் முடிவுகளில் கேரள மாநிலமும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், நிலாம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக பதவியில் இருந்தவர் பி.வி.அன்வர். சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கிய பி.வி.அன்வர், கேரள மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணியின் ஆதரவுடன் அத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் பி.வி.அன்வருக்கு ஆளும் இடதுசாரி கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனது பதவியினை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் பி.வி.அன்வர் கேரள மாநில திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனால் தான் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், பாஜக வேட்பாளர், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பி.வி.அன்வரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
நிலாம்பூர் சட்டமன்ற தொகுதியானது, பிரியங்கா காந்தி வெற்றி பெற்ற வயநாடு மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரியங்கா காந்தியும் சாலை வழி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்ஆர்யதன் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மற்றும் மேற்குவங்காளம்:
பஞ்சாப் மாநிலம் லூதினா மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் ஆரோரா 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் காளிகஞ்ச் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அலிஃபா அஹமத் 50,049 வாக்குகள் வித்தியத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். நடைப்பெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவானது பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.