2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக, பாஜக, நாதக என அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவும் தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது. திமுக அதன் கூட்டணிகளை பலமாக வைத்துள்ள நிலையில், பாஜகவுடன் கைக்கோர்த்து அதிமுக பலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தவெகவிற்கு கூட்டணி பலம் தேவைப்படுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில், கட்சி கட்டமைப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எடுத்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் மாற்று கட்சியினை சார்ந்த உறுப்பினர்களும், மறைமுகமாக தவெக-விற்கு ஆலோசனை வழங்கி வந்த சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூம் அதிகாரப்பூர்வமாக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கை பரப்பு பொதுச்செயலாளர்:
கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜூக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
”தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
அருண் ராஜ், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார்.
கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த அருண்ராஜ்?
சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருண்ராஜ், 2009 ஆம் ஆண்டு சென்னையில் ஐஆர்எஸ் அதிகாரியாக வருமானவரித் துறையில் பணியைத் தொடங்கினார். பெரியார் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவு செய்து வந்த இவர், 2016ல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி ரொக்கம் கைப்பற்றி பாராட்டை பெற்றவர். இந்த ரெய்டின் பின்னணியில் செயல்பட்டிருந்ததால் அருண்ராஜ், மத்திய அரசின் குட்புக்கிலும் இடம்பெற்றார். சென்னையில் பணியாற்றிய அவர், 2021 மார்ச் மாதம் திடீரென பீகாருக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், IRS உயரதிகாரியாக பணியாற்றி வந்த அருண்ராஜ், விஜய் கட்சி துவங்கியதில் இருந்தே விஜய்யின் ஆதரவாளராகவும் இருந்ததோடும் அவருக்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், இவர் திடீரென தன்னுடைய மத்திய அரசு பணியை ராஜினாமா செய்தார். விருப்ப ஓய்வு முடிவினை எடுத்த போதே அரசல்புரசலாக விரைவில் அருண்ராஜ் தவெகவில் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அது உறுதியாகியுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இன்றைய தினம் அதிமுக மற்றும் திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-
R. ராஜலட்சுமி (முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்), S. டேவிட் செல்வன் (முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் A. ஸ்ரீதரன் (திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் N. மரிய வில்சன் (நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி), சி.சுபாஷ் (முன்னாள் நீதிபதி. தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை)
இந்த நிலையில் தவெகவிற்கு கூட்டணி பலம் தேவைப்படுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில், கட்சி கட்டமைப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எடுத்து வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் மாற்று கட்சியினை சார்ந்த உறுப்பினர்களும், மறைமுகமாக தவெக-விற்கு ஆலோசனை வழங்கி வந்த சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூம் அதிகாரப்பூர்வமாக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கை பரப்பு பொதுச்செயலாளர்:
கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜூக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
”தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
அருண் ராஜ், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார்.
கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த அருண்ராஜ்?
சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருண்ராஜ், 2009 ஆம் ஆண்டு சென்னையில் ஐஆர்எஸ் அதிகாரியாக வருமானவரித் துறையில் பணியைத் தொடங்கினார். பெரியார் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவு செய்து வந்த இவர், 2016ல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி ரொக்கம் கைப்பற்றி பாராட்டை பெற்றவர். இந்த ரெய்டின் பின்னணியில் செயல்பட்டிருந்ததால் அருண்ராஜ், மத்திய அரசின் குட்புக்கிலும் இடம்பெற்றார். சென்னையில் பணியாற்றிய அவர், 2021 மார்ச் மாதம் திடீரென பீகாருக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், IRS உயரதிகாரியாக பணியாற்றி வந்த அருண்ராஜ், விஜய் கட்சி துவங்கியதில் இருந்தே விஜய்யின் ஆதரவாளராகவும் இருந்ததோடும் அவருக்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், இவர் திடீரென தன்னுடைய மத்திய அரசு பணியை ராஜினாமா செய்தார். விருப்ப ஓய்வு முடிவினை எடுத்த போதே அரசல்புரசலாக விரைவில் அருண்ராஜ் தவெகவில் இணைவார் என பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அது உறுதியாகியுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இன்றைய தினம் அதிமுக மற்றும் திமுகவினை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-
R. ராஜலட்சுமி (முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்), S. டேவிட் செல்வன் (முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் A. ஸ்ரீதரன் (திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் N. மரிய வில்சன் (நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி), சி.சுபாஷ் (முன்னாள் நீதிபதி. தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை)
— TVK Vijay (@TVKVijayHQ) June 9, 2025