பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை எதிர்த்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை "திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து ஆலோசிப்பதற்காகச் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அன்புமணி தரப்பு பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உள்பட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் விமர்சனம்
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது மட்டும் எஸ்.ஐ.ஆர் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று! ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள்
தி.மு.க.-வின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினைப் புறக்கத்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. தி.மு.க. அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன தமிழக மக்கள், இந்த எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்! ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து ஆலோசிப்பதற்காகச் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அன்புமணி தரப்பு பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உள்பட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் விமர்சனம்
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது மட்டும் எஸ்.ஐ.ஆர் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று! ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள்
தி.மு.க.-வின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினைப் புறக்கத்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. தி.மு.க. அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன தமிழக மக்கள், இந்த எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்! ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
LIVE 24 X 7









