தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்றையத் தினம் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8-9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க எதிர்கட்சிகள் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
பாஜகவில் இணையும் திமுக கூட்டணி கட்சி?
இதற்கேற்ப அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணியில் பலர் இணைவார்கள். திமுக கூட்டணி உடைந்து, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவும். புதிதாக இணையும் கட்சி யார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் எப்படி” என கூறினார்.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் நேற்றையத் தினம், திமுகவின் கூட்டணிக் கட்சிகளோடு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கேள்வி எழுப்பினர்.
சுயமாக சிந்திக்கக்கூடியவர் எடப்பாடி:
இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அப்பாவு, "இறுதிவரை இபிஎஸ் அவர்களோடு இருப்பாரா என்று பார்ப்போம். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுயமாக சிந்திக்கக்கூடியவர், விரைவில் நல்ல முடிவை எடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதிமுக தொண்டர்களிடையே சில வருத்தத்தை உண்டாக்கியுள்ளதே காண முடிகிறது. அரசியல் விமர்சகர்களும், அதிமுகவின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைய வாய்புள்ளது என கூறி வரும் நிலையில், அப்பாவுவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
"சுயமாக சிந்திக்கக்கூடியவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்" என்ற அப்பாவுவின் கூற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகி வேறு ஏதேனும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தமிழகம் வருகை தந்த அமித்ஷா, மாநில பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதுக்குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்தலுக்கு பிறகு, பாஜக-அதிமுக கூட்டணியில் அமைச்சரவை இடப்பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால், பாஜகவிற்கு அதிகாரத்தில் இடமளிக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8-9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க எதிர்கட்சிகள் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
பாஜகவில் இணையும் திமுக கூட்டணி கட்சி?
இதற்கேற்ப அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணியில் பலர் இணைவார்கள். திமுக கூட்டணி உடைந்து, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவும். புதிதாக இணையும் கட்சி யார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் எப்படி” என கூறினார்.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் நேற்றையத் தினம், திமுகவின் கூட்டணிக் கட்சிகளோடு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கேள்வி எழுப்பினர்.
சுயமாக சிந்திக்கக்கூடியவர் எடப்பாடி:
இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அப்பாவு, "இறுதிவரை இபிஎஸ் அவர்களோடு இருப்பாரா என்று பார்ப்போம். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுயமாக சிந்திக்கக்கூடியவர், விரைவில் நல்ல முடிவை எடுப்பார். பொறுத்திருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதிமுக தொண்டர்களிடையே சில வருத்தத்தை உண்டாக்கியுள்ளதே காண முடிகிறது. அரசியல் விமர்சகர்களும், அதிமுகவின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைய வாய்புள்ளது என கூறி வரும் நிலையில், அப்பாவுவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
"சுயமாக சிந்திக்கக்கூடியவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்" என்ற அப்பாவுவின் கூற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகி வேறு ஏதேனும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தமிழகம் வருகை தந்த அமித்ஷா, மாநில பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதுக்குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்தலுக்கு பிறகு, பாஜக-அதிமுக கூட்டணியில் அமைச்சரவை இடப்பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால், பாஜகவிற்கு அதிகாரத்தில் இடமளிக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.