தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முடித்துக்கொண்டார்.
உண்ணாவிரதத்தின் தொடக்கம் மற்றும் இடமாற்றம்
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் உள்ள திஷாக்குழு பார்வையாளர்கள் கூடமான ராஜீவ் பவனில் அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை சீராகாததால், மறுநாள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே, தனது போராட்டத்தை சசிகாந்த் செந்தில் தொடர்ந்து மேற்கொண்டார்.
தலைவர்களின் அறிவுறுத்தலை ஏற்று..
சசிகாந்த் செந்திலின் உடல்நலம் குறித்து அறிந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். அதேபோல, அமைச்சர் ஆவடி நாசர், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு, போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நான்கு நாட்களாக மேற்கொண்ட தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (செப்.1) இரவு அவர் முடித்துக்கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பழச்சாறு அருந்தி அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி சசிகாந்த் செந்தில், "தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தின் தொடக்கம் மற்றும் இடமாற்றம்
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் உள்ள திஷாக்குழு பார்வையாளர்கள் கூடமான ராஜீவ் பவனில் அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை சீராகாததால், மறுநாள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே, தனது போராட்டத்தை சசிகாந்த் செந்தில் தொடர்ந்து மேற்கொண்டார்.
தலைவர்களின் அறிவுறுத்தலை ஏற்று..
சசிகாந்த் செந்திலின் உடல்நலம் குறித்து அறிந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். அதேபோல, அமைச்சர் ஆவடி நாசர், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்ததோடு, போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, நான்கு நாட்களாக மேற்கொண்ட தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (செப்.1) இரவு அவர் முடித்துக்கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பழச்சாறு அருந்தி அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி சசிகாந்த் செந்தில், "தலைவர்களின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.