சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உள்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மைதானத்திற்கு உள்ளே உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணியினை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையினை வென்றது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி ரசிகர்கள், பெங்களூரு அணியின் வெற்றியினை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அகமாதபாத்திலிருந்து ஆர்சிபி அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் இன்று பெங்களூரு வருகைத் தந்தனர். கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் அனைவரையும் நேரில் வரவேற்று உற்சாக படுத்தினர். இதனைத் தொடர்ந்து, திறந்தவெளி பேருந்தில் அணி வீரர்கள் பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் பேரணி வந்தனர்.
முக்கிய நிகழ்வான பாராட்டு விழாவிற்காக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, ஸ்டேடியத்தின் 7வது கேட் பகுதியிலும், நுழைவாயிலிலும் கூட்டம் அலைமோதியது.
எதிர்பாரதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 முதல் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இருப்பினும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிலைமை மோசமடைந்தது. ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணியினை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையினை வென்றது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி ரசிகர்கள், பெங்களூரு அணியின் வெற்றியினை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அகமாதபாத்திலிருந்து ஆர்சிபி அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் இன்று பெங்களூரு வருகைத் தந்தனர். கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் அனைவரையும் நேரில் வரவேற்று உற்சாக படுத்தினர். இதனைத் தொடர்ந்து, திறந்தவெளி பேருந்தில் அணி வீரர்கள் பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் பேரணி வந்தனர்.
முக்கிய நிகழ்வான பாராட்டு விழாவிற்காக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, ஸ்டேடியத்தின் 7வது கேட் பகுதியிலும், நுழைவாயிலிலும் கூட்டம் அலைமோதியது.
எதிர்பாரதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 முதல் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இருப்பினும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிலைமை மோசமடைந்தது. ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.