தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வலுவான அடித்தளமாக தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பால சுப்பிரமணியம் சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 14 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். சித்தார்த் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சினை பொறுத்தவரை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின், பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தார். அனுபவம் வாய்ந்த வீரரும், திண்டுக்கல் அணியின் கேப்டனுமான அஸ்வின் 15 ரன்களில் ரோகித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 8 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. விமல் குமார் மற்றும் சிவம் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
TNPL தொடரில் இதுவரை 8 சீசன் முடிந்து உள்ள நிலையில் அதிகபட்சமாக சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் ஒருமுறை பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பால சுப்பிரமணியம் சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 14 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். சித்தார்த் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சினை பொறுத்தவரை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின், பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தார். அனுபவம் வாய்ந்த வீரரும், திண்டுக்கல் அணியின் கேப்டனுமான அஸ்வின் 15 ரன்களில் ரோகித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 8 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. விமல் குமார் மற்றும் சிவம் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
TNPL தொடரில் இதுவரை 8 சீசன் முடிந்து உள்ள நிலையில் அதிகபட்சமாக சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் ஒருமுறை பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.